Friday, June 5, 2009

0 என் மீது அடிக்கும் மூத்திர நெடி.

இங்கே என் மீதோ,
சாலை ஓரத்தில்
கிடக்கும் பிச்சைக்காரன் மீதோ,
வசதி படைத்த அந்த
கோடீஸ்வரன் மீதோ,
இந்த எழுத்தாளர், அறிவுஜீவி
இவர்கள் மீதோ,
கூட்டம் நடத்தும் அந்த
அரசியல்வாதி மீதோ
இன்னும் யார் யார்
எங்கள் எட்டு கோடி பேர்
எல்லோரின் மீதோ,
எந்த எறிகணையும்,
எந்த வன்கொடுமையும்
நிகழ்ந்துவிடவில்லைதான்......

இருப்பினும்
இந்தியா என்ற தேசத்தானும்,
சிங்களம் என்ற தேசத்தானும்,
சேர்ந்து
காரி உமிழ்ந்து
வழிய விட்ட எச்சிலும்,
அடித்து முடித்த
மூத்திர நெடியும் - நான்
இரவில் புரண்டு புரண்டு படுத்த
எல்லா வேளைகளிலும்
என்னை
எழுப்பிவிட்டிருக்கிறது.

நாளை
எம் புலிகள்
ஈழ தனி தமிழ் நாட்டை
கட்டி எழுப்பி விட்டு
ஈழ தமிழ் வீர வரலாறு
எழுதும் போதும் கூட
என் மீது அந்த
மூத்திர நெடி
அடித்துக்கொண்டுதானிருக்கும்.

0 comments: