Monday, May 25, 2009

0 திரும்பத் திரும்ப எழுதப்படுகிற (தேவை இல்லாத) கவிதை.


என் பெயர் என்ன ?
நான் எங்கே இருக்கிறேன் ?
இது என்ன இடம் ?

நான் உயிருடன்தான் இருக்கிறேனா ?
அல்லது செத்துபோய்விட்டேனா ?

அவர்கள் ஏன் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் ?
எங்கிருந்து வந்ததிந்த குரோதம் ?
இது என்ன ஒரே ரத்தமாக கொப்பளிக்கிறதே ?

நிலை குலைய செய்யும் படி -
தொடர்ந்து அங்கு அழுது கொண்டிருப்பது யார் ?
ஏன் ?

இங்கு,இப்பொழுது
நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் ?

இனி, என்ன செய்யப்போகிறேன்

இதெல்லாம் எதற்க்காக ?
ஏன் ?

--------குருநாத் கேடோ ரஞ்சன்.
லயம்-10, ஜூன்-1994 இதழ்.

0 comments: