Monday, December 29, 2008

2 திருமணம்

தொலை தூர

நகரம் ஒன்றிலிருந்து
அத்தர் போன்ற வாசனை
கசிந்து கொண்டிருக்கிறது.

நீயும்
நானும்
இதுவரை பார்த்திராத ஒருவன்
புலன்களின் இன்பம் பற்றி
சொல்லிப்போகிறான்.

அன்று
புலன்கள் எழுந்து கொண்ட
பொழுதிலிருந்து-நான்
வரைந்து வைத்திருக்கும்
கற்பனைகளை காண்கையில்
அம்மா வந்து
தட்டி எழுப்பினாள்
என்னை.

2 comments:

மதுரை சரவணன் said...

முயற்சி பாரட்டுக்குரியது. வாழ்த்துக்கள்

zara said...

nandri... saravanan