Sunday, November 16, 2008

0 Poems :: கவிதைகள்

-----எப்போதும்-----

ஆசீஸ் முல்லக் தெருவில்
25 ஆண்டுகளாய் வாழ்ந்த
வயதான தாத்தாவை கொன்ற
கடவுளை
காவேரி டீ ஸ்டால்லில் வைத்து
கையும் களவுமாய் பிடித்தேன்.

எனக்கு
என்று தேதி குறித்திருக்கிறாய் ?
என கேட்டதர்க்கு,
நீ
முன் எப்போதும்
பிறந்ததே இல்லை-என
சொன்னார்.

ஒரு சிகரெட்டை
பற்ற வைத்தவாறே
கடவுளிடம்
சொல்லிவிட்டு வந்தேன்
நான்
இனி எப்போதும்
இறப்பதும் இல்லை என்று..

0 comments: